Saturday 12 September 2015

பைலட்டின் பாற்கடல் கோபம் (கவிதை)


பைலட்டின் பாற்கடல் கோபம்
பல லட்சம் கோடி மைல்கள் என
வானின் தொலைவை பூகோளம்
விவரித்த ஞாபகம்
ஆனால் நானோ
மேகங்களின் மேல் அமர்ந்திருக்கிறேன்
நட்சத்திரங்களை அணைக்கத் துடிக்கிறேன்
நீலவானத்தை முத்தமிடுகிறேன்
இதோ புகை மண்டலத்தின் நடுவே
நாரதர் தம்புரா மீட்டுகிறார்
திருவிளையாடல் கைலாயத்தில்
ஞானப்பழத்திற்கு சண்டை நடக்கிறது
பாற்கடலில் பரந்தாமன்
பள்ளி கொண்டிருக்கிறார்
புகை நடுவே பிரம்மாவும்
சரஸ்வதியும் புன்னகைக்கின்றார்கள்
நானோ மெய் மறக்கிறேன்.
முப்பதாயிரம் அடி உயரத்தில்
பறக்கிறோம் என்று
புள்ளிவிவரம் கொடுத்தார் பைலட்
என் பக்தி பரவசம் புரியாமல்
நிமிடத்தில் கைலாய வைகுண்டங்கள்
காணாமல் போய்விட்டன.
நாரதரும் தலைமறைவாகிவிட்டார்
கற்பனைகள் உபயம்
ஏர் இண்டிகோ ஏர்லைன்ஸ்.

                    ---இரா. சைலஜா சக்தி

No comments:

Post a Comment

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}