Wednesday 2 December 2015

இயற்கையே கோபமா? (கவிதை)

 
                            இயற்கையே கோபமா?




மழையே என்ன கோபம் உனக்கு?

மக்களை மிதக்க வைக்கிறாய்.
ஆற்றங்கரைகளில் மணற்கொள்ளை செய்ததாலா?

வீடுகளை ஆக்கிரமிக்கிறாய்.
ஏரிகளை நாங்கள் ஆக்கிரமித்ததாலா?

உணவுக்காக தவிக்க வைக்கிறாய்.
பாலித்தீன் குப்பைகளை பூமிக்கு உணவளித்ததாலா?

நீருக்காக ஏங்க வைக்கிறாய்.
நிலத்தடி நீர்மட்டத்தை உறிஞ்சுவதாலா?

வாகனங்களை மூழ்கடிக்கிறாய்.
புகை கக்கி உன் வானப்பரப்பை பாழ்படுத்துவதாலா?

மின்சாரத்தை துண்டிக்கிறாய்.
குளிரூட்டும் ஏ.சிகள் ஓசோனை ஓட்டை போடுவதாலா?

வீடுகளை அழிக்கிறாய்.
நாங்கள் காடுகளை அழித்ததாலா?

மொத்தத்தில் பூமியை உனக்குள் அமிழ்த்துகிறாய்.
நாங்கள் பூமியை வெப்பமயமாக்கியதாலா?

நீ வற்றினால் மனித இனம் வற்றும்…
நீ முற்றினால் மனித இனம் அழியும்…


புரிந்து கொள்ள வேண்டியது
நீ அல்ல…. மனிதர்கள்தான்…

இயற்கை மனிதன் வாழ தன்னையே தாரை வார்க்கும்.
எல்லை மீறும் மனிதனை தனக்குள் தாரை வார்க்கும்…..

மனிதனே!... பூமி காத்து உன் சந்ததி காப்பாயா?
அல்லது பூமி சிதைத்து உன் வேரறுப்பாயா?

உன் பதிலை எதிர்பார்ப்பது…. நானல்ல….
பழிவாங்க காத்திருக்கும்
உன்னால் பாதிக்கப்பட்ட இயற்கை.

                       -இரா. சைலஜா சக்தி

No comments:

Post a Comment

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}