Monday 28 December 2015

தலைமறைவாகும் நிர்பயாக்கள் (கவிதை)

தலைமறைவாகும் நிர்பயாக்கள்







பெண்
இந்த இரண்டெழுத்து வார்த்தை
இவளின் அடையாளம்

நிர்பயா
இந்த நான்கெழுத்து வார்த்தை
இவளின் அவலம்

புரிய வைக்கிறாள்
தானொரு குழந்தையென
தன் கடைசிக் கடிதத்தில்

கேட்கும் சப்தமெல்லாம்
பேருந்தின் ஓசையென ஓலமிடுகிறாள்

மிருகங்கள் கடித்துக் குதறியதாய் சொல்லி
உடல் கழுவ நீர் கேட்கிறாள்

அறைக்குள் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு
ஆணைக் கண்டும் அலறுகிறாள்

விடைபெற்று விட்டாள்
நிரந்தரமாய் நம்மிடமிருந்து

தண்டிக்கப்பட்டுவிட்டார்கள்
குற்றவாளிகள்

ஒரு சந்தேகம்

ஓடுகிற பேருந்தில் வேட்டையாடிய
மிருகங்கள் மட்டும்தான் குற்றவாளிகளா?

தேசிய பானமாகிவிட்ட மது
உள்ளே சென்றதும்
வெளியே தள்ளுகிறது
மனித மிருகத்தை
  
மீசை அரும்பும் முன்
அவன் ஆசைக்குள் போதையூற்றும்
இந்த மதுச்சமூகம்
முதல் குற்றவாளி

நாயகனின் இலக்கணம்
மதுவில் குளித்து
மங்கையில் திளைப்பதென
பாடம் நடத்தும் படைப்புகள்
இரண்டாம் குற்றவாளிகள்

உடல் அறிவியல் தெரியாமல்
ஆண் பலவீனம் புரியாமல்
அரைகுறை ஆடை
பெண்ணுரிமை எனப் பிதற்றும்
பெண் கூட்டம்
மூன்றாம் குற்றவாளிகள்

அங்கம் காட்டி
ஆணை மிருகமாக்குகிற
பெண்னே நீ தப்பித்துக் கொள்கிறாய்

நீ வெறியேற்றி அனுப்புகிற
அவன் கையில்
சிக்கி சின்னாபின்னமாவதோ
அப்பாவி நிர்பயாக்கள்தான்

நிர்பயாக்கள் பலியாவது
வக்கிர ஆண்களால்
ஆனால்
நிர்பயாக்கள் உருவாவது
பொறுப்பற்ற சமூகத்தால்

சமூகக் கடமை
ஆணுக்கு மட்டுமல்ல
சரிநிகர் சமானம் பேசும்
பெண்ணுக்கும்தான்

ஆகவே
சமூகம் தன்னைத்
திருத்திக் கொள்ளும்வரை
தலைமறைவாய் வாழுங்கள்
நிர்பயாக்களே!....
தப்பிப்பதற்காக……


   --- இரா. சைலஜா சக்தி.

No comments:

Post a Comment

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}