Wednesday 9 December 2015

மனிதம் என்ன விலை? (கவிதை)



                       னிதம் என்ன விலை?




ஒரு லிட்டர் பால்
ஒன்பது மடங்கு விலை உயர்வில்

குடிக்கிற தண்ணீரில்
கூடுமானவரை லாபம்

ஓட்டுக்காக ஓடிவந்து
தானமளிக்கும் கரை வேட்டிகள்

உன் தவறு! என் தவறு! என
அடித்துக் கொள்ளும் கட்சிகள்

ஏரிகளில் வீடு கட்டியது
யார் குற்றமென பஞ்சாயத்து

அனுமதியளித்தது அரசின் தவறாம்
இல்லை இல்லை
வீடுகட்டி விற்றவர் தவறாம்
இல்லை இல்லை
வாங்கிக் குடியேறியவர் தவறாம்

பஞ்சாயத்து முடிந்தபாடில்லை
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த
வானம் பொங்கியெழுந்து விட்டது

அந்நியன் ஸ்டைலில் அனைவருக்கும்
கருட புராணத் தண்டனை
விதிவிலக்கின்றி!...
ஆர்ப்பாட்டத்தின் முடிவில்
அடையாளம் காட்டியது மழை
அன்பான உள்ளங்களை

பேரழிவில் கூட
ஆதாயத்திற்கு அலையும் மனிதர்களே
மிச்சமிருப்பது பூமி மட்டும்தான்

பூமி தன் பொறுமை மீறுவதற்குள்
பொருள் தேடுங்கள் தமிழகராதியில்
மனிதம் என்ற வார்த்தைக்கு.
                 இரா. சைலஜா சக்தி

No comments:

Post a Comment

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}