Tuesday 21 June 2016

சைலஜாவின் ஹைக்கூ கவிதைகள் – 2


21.06.2016                                                                                                         இரா.சைலஜா சக்தி                                                  

                              சைலஜாவின் ஹைக்கூ கவிதைகள் – 2






1.    உனை கண்டதும்
   உருகி கரைகிறேன்
   ஐஸ்கிரீம்

 2.    கண்ணாடியில் முகம்பார்த்தேன்
   லேசான அழுக்கு
   கழுவித் துடைத்தேன்
   பளிச்சென்றிருந்தது கண்ணாடி

 3.   ஆணும்
     பிரசவிக்கிறான்
     கவிஞனாகும்போது

 4.   விடலைப் பையன்கள்
     வீரம் காட்டும்
     சுயம்வரம்
     ஊர்த்திருவிழா

 5.   குண்டு குழியும்
     குறுக்கு சந்தும்
     ஹைவேக்களாகி விட்டன
     ஆட்டோக்களுக்கு

 6.   குழந்தை விழுகிறது
     அதிகமான அழுகை
     அம்மாவிடமிருந்து





No comments:

Post a Comment

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}