Thursday 23 June 2016

மாலைப்பொழுதின் மயக்கத்திலே(கவிதை)

       



23.06.2016                                                    இரா.சைலஜா சக்தி

                  மாலைப்பொழுதின் மயக்கத்திலே


மயங்கும் மாலைப்பொழுது
பச்சை புல்வெளி மெத்தைகள்
அணிவகுப்பு நடத்தும் மரங்கள்
புன்னகை பூக்கும் மலர்கள்
கிளை விரித்த ஆலமரம்
மவுனத்தில் கல்யானைகள்
உச்சியில் ஏழுகலசம் தாங்கிய கோபுரம்
உள்ளே நுழைந்து பாரக்கிறேன்
காதலன் தோளில் தலைசாய்த்த காதலி
களைப்பில் உறங்கும் பிச்சைக்கார அன்பர்கள்
புதுமனைவியின் முந்தானைக்குள்
ஒளிந்துகொள்ள துடிக்கும் புதுமாப்பிள்ளை
நெட்டை காதலனின் உயரத்தை
தூணில்செதுக்கும் குட்டை காதலி
செல்ஃபி எடுக்கும் செல்லுலாய்ட் அழகிகள்
லேப்டாப் இளைஞர்களின் வட்டமேசைமாநாடு
அரட்டையடிக்கும் மாணவகண்மணிகள்
ஓய்வெடுக்கும் அயல்தேச அம்மணி
புளியோதரையை பகுத்துண்ணும் குடும்பம்
மாமியார்கொடுமை பேசும் மல்லிகைப்பூ பெண்கள்
ஆங்காங்கே கையேந்தும் டஸ்ட்பின்கள்
அனைவரையும் பார்த்து விட்டேன்
ஒருவரைத் தவிர
ஆமாம்
அவருக்குத்தான் வாசலில் நின்று
வழியனுப்பும் வேலை தரப்பட்டிருக்கிறதே??
கடமை ஆற்றுகிறார் தேசபிதா
இடம்
காந்தி மண்டபம், சென்னை

No comments:

Post a Comment

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}