Monday 20 June 2016

ஆடுக ஊஞ்சல்(கவிதை)

20.06.2016                                                                                               இரா.சைலஜா சக்தி                                                                                                                                

                      ஆடுக ஊஞ்சல்



ஆலமரக் கிளையிலே
அம்மாவின் சேலைத்தொட்டிலிலே

காற்றின் தாலாட்டில்
நிம்மதியான நித்திரை

துயில் கலையாதே கண்ணே !!!

பஞ்சு மெத்தை இல்லை
பால்பழமோ இல்லவே இல்லை

அள்ளிச்செல்ல பள்ளிவேன் இல்லை
அடைத்துப்போட பிளேஸ்கூல் இல்லை

மூச்சுவிட ஏசி காற்று இல்லை
முதுகுச்சுமை இல்லவே இல்லை

உறங்குவாய் கண்ணே
அன்பான ஆலமரநிழலில்
அழகான சேலைஊஞ்சலில்

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே


No comments:

Post a Comment

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}