Sunday 7 August 2016

நட்பதிகாரம் - 2 (கவிதை)

நட்பதிகாரம் - 2 (கவிதை)




மக்களை ஆட்சி செய்தவன்
மனதை ஆட்சி செய்தது – தமிழ்ப்புலமை
கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

பகவத் கீதை நாயகனை
பாசத்தால் பிணைத்து போட்டது – வில்வித்தை
கிருஷ்ணன் – அர்ஜுனன் நட்பு

வஞ்சகம் நிறைந்தவனின்
வாழ்வுக்காக மாண்டது – வள்ளல்தன்மை
துரியோதனன் – கர்ணன் நட்பு

பிடிஅவலில் பசிபோக்கி
வறுமை நீக்கியது – குருகுல அன்பு
கிருஷ்ணன் – குசேலன் நட்பு

தான்வாழ கிடைத்த நெல்லிக்கனியை
தமிழ்வாழ தானமளித்தது – அரசனின் அன்பு
அதியமான் – அவ்வை நட்பு

தமிழ்ப்புலவனுக்கு தலையை
தயங்காமல் தந்தது – கொடைத்தன்மை
குமணன் – பெருஞ்சித்திரனார் நட்பு

உடலுக்குள் உயிர்போல்வதாம் நட்பு
இடுக்கண் களைவதாம் நட்பு
இடுக்கண் வரின்
இன்னுயிர் துறப்பதுவும் நட்பே….
        

            -- இரா. சைலஜா சக்தி

No comments:

Post a Comment

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}