Sunday 7 August 2016

நட்பதிகாரம் - 1 (கவிதை)

நட்பதிகாரம் - 1 (கவிதை)




அவன்
பால்ய வயதின்
பள்ளித் தோழன்

ஒரே வகுப்பில்
ஒரே பெஞ்சில்
ஒருவரில் ஒருவர்
ஒன்றானோம் நட்பால்

புரியாத பாடங்களை
புரிய வைத்தான்
பருவ தவறுகளை
பாசத்துடன் திருத்தினான்

புகை பகையென
பண்பாக தடுத்தான்
மாணவிகளை நகைப்பது
மாண்பல்ல என்றான்

காப்பியடித்து தோ்வெழுத
கண்டிப்போடு மறுத்தான்

வேலைதேடி திரிகையில்
வியாபாரம் தந்தான்

காதலித்த எங்களை
கணவன் மனைவியாக்கினான்
பிள்ளைகளின் படிப்புக்கு
பாதை காட்டினான்

வழிகாட்டியவன் வாழ்வில்
விபத்து விதிசெய்தது

உயிரான பிள்ளைகளை
மறந்துபோய் மனைவியோடு
மாண்டு விட்டான்

அன்பால் ஆகியவன்
அமரனாய் ஆகிவிட்டான்

அனாதையான எனக்கு
அப்பனும் ஆனான் உயிர்நண்பன்
தவிக்கின்ற அவன் பிள்ளைகட்கு
தகப்பனாய் ஆகின்றேன் நான்

நண்பன் காட்டிய பாதையில்
நம்பிக்கையுடன் பயணிக்கிறேன்
வெளிச்சமாய் வருவான் என்று

உயிர்நட்பு
மரணம் கடந்தும்
மரணிக்காமல் வாழும்
நிஜங்கள் கடந்தும்
நினைவுகளாய் நீளும்

நண்பர்கள் மறைந்தாலும்
நட்பு மறைவதில்லை…..
நட்பு மறைவதே இல்லை……   

           -- இரா. சைலஜா சக்தி


No comments:

Post a Comment

.post {-webkit-user-select: none; -khtml-user-select: none; -moz-user-select: -moz-none; -ms-user-select: none; user-select: none;}